Friday 3rd of May 2024 03:58:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
மன்னார் புதிய பேருந்து நிலைய மல-சல கூட தொகுதி திடீரென மூடப்பட்டதால் பயணிகள் அவதி!

மன்னார் புதிய பேருந்து நிலைய மல-சல கூட தொகுதி திடீரென மூடப்பட்டதால் பயணிகள் அவதி!


மன்னார் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மல-சல கூடத் தொகுதி திடீரென மூடப்பட்டுள்ளதால் பயணிகள் பெரிதும் அவதியுற்றுள்ளனர்.

மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட புதிய பேருந்து தரிப்பிட வளாகத்தில் காணப்படும் மன்னார் நகர சபையயின் கண்காணிப்பில் உள்ள பொது மலசல கூடம் இன்றைய தினம் (சனிக்கிழமை) காலை முதல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

இதனால் இன்றைய தினம் பேருந்து தரிப்படத்திற்கு வந்த மக்கள் மற்றும் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

மேலும் இன்றைய தினம் சனிக்கிழமை காலை மடு திருத்தலத்திற்குச் சென்று மீண்டும் மன்னருக்கு வந்த மக்கள் மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் உள்ள மல சல கூட தொகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளமையினால பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

தற்போது குறித்த மலசல கூட தொகுதி முழுமையாக மூடப்பட்ட நிலையில் உள்ளமையினால் மலசல கூடத்திற்கு செல்ல உள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடையம் தொடர்பில் உடனடியாக மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE